ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு!

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு!


தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 27003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்துர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 27002 பதவியிடங்களுக்கு 98151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில், 1166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன.

14571 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற்று கொண்டனர். 2981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23998 பதவியிடங்களுக்கு 79433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.


இதையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad