தமிழக அரசுப் பள்ளிகளில் இப்படியொரு ஏற்பாடு; மத்திய அமைச்சர் பாராட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

தமிழக அரசுப் பள்ளிகளில் இப்படியொரு ஏற்பாடு; மத்திய அமைச்சர் பாராட்டு!

தமிழக அரசுப் பள்ளிகளில் இப்படியொரு ஏற்பாடு; மத்திய அமைச்சர் பாராட்டு!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உரிய முன்னேற்பாடுகளை தொடர்ந்து முடுக்கி விட்டு வருகிறது. அதேசமயம் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தற்போது மத்திய அமைச்சர் பாராட்டு அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மற்றும் ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் வருகை புரிந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஆய்வு

இவர் சென்னையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஊரகப் பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் மறும் ஜல்ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் 79,395 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள ஒரு கோடியே 27 லட்சம் வீடுகளில் இதுவரை 46.33 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல்

இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கு 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உரிய முறையில் பராமரித்து குடிநீர் இணைப்புகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தூய்மை இந்தியா திட்ட செயல்பாடுகள்

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், தனி நபர் கழிப்பறைகள், சமுதாய வளாகங்கள் ஆகிய செயல்பாடுகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.366.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியது. சுகாதாரம், கழிவு மேலாண்மை, நெகிழி கழிவுகள் ஒழித்தல் உள்ளிட்டவை குறித்து தமிழக மக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad