ஆசிரியர்கள் கலங்கரை விளக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

ஆசிரியர்கள் கலங்கரை விளக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

ஆசிரியர்கள் கலங்கரை விளக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தையொட்டி அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பிரபலங்கள், சமூக ஆரவலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூடியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள். ஆசிரியப்பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை; அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி. என்னரும் தமிழ்நாட்டின்கண் அனைவரும் கற்று இன்புறச் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

“மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில்தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் அர்ப்பணிப்புப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர்களே.

No comments:

Post a Comment

Post Top Ad