"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" - தந்தை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" - தந்தை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட முதல்வர்!

 "சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" - தந்தை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட முதல்வர்!

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என, தனது தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறித்து, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் விளக்கம் அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் தந்தை, நந்த் குமார் பாகெல் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அப்போது அவர் சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

நந்தகுமார் பாகெல் பேசுகையில், 'இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad