லைட்டா ஆட்டம் காட்டும் மூன்றாவது அலை; பலே ஐடியா உடன் மாநில அரசு!
இந்தியாவில்
கொரோனா முதல் அலை உருவாகும் போது அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா காணப்பட்டது. நடப்பாண்டு ஏற்பட்ட இரண்டாவது அலையின் தொடக்கத்திலும் கொத்து கொத்தாக உயிர்களை இழக்க நேரிட்டது. மிக மோசமான நிலையில் இருந்த மகாராஷ்டிரா,
படிப்படியாக பாடம் கற்றுக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த தொடங்கியது. தற்போது தினசரி தொற்றை பெரிதும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. நேற்று புதிதாக 4,130 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2,506 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மூன்றாவது அலை வருமா?
64 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 52,025 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மாநில சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி டாக்டர்
பிரதீப் அவதே கூறுகையில், மகாராஷ்டிராவில் மூன்றாவது அலைக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன. ஏனெனில் கோவிட் உள்கட்டமைப்பு வசதிகளை 1.5 மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் 100 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்றால்,
முதல்முறை மகாராஷ்டிராவில்
150 பேருக்கு தேவையான படுக்கை மற்றும் மருத்துவ வசதிகள் தயார்படுத்தி விடுவோம் என்று கூறினார். மேலும் பேசுகையில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையானது உருமாறிய டெல்டா வைரஸால் ஏற்பட்டது. அதுவும் நடப்பாண்டின் தொடக்கத்தில் மகாராஷ்ட்ராவில் தான் முதல்முறை கண்டறியப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்தில் டெல்டா வைரஸால் மூன்றாவது அலை தாக்கப்பட்ட போது, இந்தியாவிலும்,
No comments:
Post a Comment