"தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து கற்று கொள்ளுங்க!" - மத்திய அரசை தெறிக்க விட்ட சஞ்சய் ராவத்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருக்கும் அரசியல் முதிர்ச்சி கூட மத்தியில் ஆள்பவர்களிடம் இல்லை என, சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, ஐ.சி.எச்.ஆா்., எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட முதல் டிஜிட்டல் போஸ்டரில், நாட்டின் முதல் பிரதமரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஜவஹா்லால் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், அக்கட்சி மூத்தத் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் எழுதி உள்ள கட்டுரையில் தெரிவித்து உள்ளதாவது:
ஜவஹர்லால் நேரு, மௌலானா அப்துல் கலாம் அசாத் ஆகியோரின் புகைப்படங்களை மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் போஸ்டரில் தவிர்த்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் செயல்.
No comments:
Post a Comment