அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்; கொரோனாவை விரட்ட பலே ஏற்பாடு!
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இங்கு போதிய அளவில் தடுப்பூசி போடப்படாத காரணத்தால் கோவிட்-19 பரவல் வேகமாக காணப்படுகிறது. அதிலும், கடந்த சில வாரங்களில் பாதிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. இதன் பின்னணி உருமாறிய டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தினசரி பாதிப்புகள் 71ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து
படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 94ஆக அதிகரித்தது.
அதிகபட்ச உயிரிழப்பு விகிதம்
நேற்றைய தினம் (செப்டம்பர் 1) புதிதாக 1,745 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 32,192ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பரவியதில் இருந்து தற்போது வரை 18,950 பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்றைய தினம் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் அதிகபட்ச உயிரிழப்பு விகிதத்தை கொண்ட ஒரே நாடாக பல்கேரியா அதிர்ச்சி அளித்து வருகிறது.
புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
இவ்வாறு வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வரும் 7ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை பல்கேரிய அரசு விதித்துள்ளது. அதன்படி, உணவகங்கள், பார்கள் உள்ளிட்டவை இரவு 10 மணிக்கு மேல் செயல்படக் கூடாது. இசை திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமாஸ், தியேட்டர்கள் உள்ளிட்டவை 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம். வரும் 15ஆம்
தேதி புதிய கல்வியாண்டு தொடங்குகிறது.
No comments:
Post a Comment