இனி மொட்டைக்கு கட்டணமில்லை, திருமணத்திற்கு வசூல் இல்லை - தமிழக அரசு மெகா அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

இனி மொட்டைக்கு கட்டணமில்லை, திருமணத்திற்கு வசூல் இல்லை - தமிழக அரசு மெகா அறிவிப்பு

இனி மொட்டைக்கு கட்டணமில்லை, திருமணத்திற்கு வசூல் இல்லை - தமிழக அரசு மெகா அறிவிப்பு

* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்

* தமிழக கோவில்களில் இனி முடி காணிக்கைக்கு (மொட்டை போடுவதற்கு) இனி கட்டணமில்லை.

* திருக்கோவில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடைபயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்

* மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயில்களில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும்.
* அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ 1,000ல் இருந்து ரூ 3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
* திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

* தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் ரூ 1,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்படும்.

* கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad