அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் சான்ஸ்; மத்திய அரசு புதிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் சான்ஸ்; மத்திய அரசு புதிய அறிவிப்பு!

 அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் சான்ஸ்; மத்திய அரசு புதிய அறிவிப்பு!

மத்தியில் ஆளும்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, யோகா குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐ.நா பொதுச்சபையிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை ஏற்று யோகா தினம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ”ஒய் பிரேக்” (Yoga Break) என்ற பெயரில் பணியிடங்களில் 5 நிமிட‘யோகா இடைவேளை’யை பின்பற்றும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டம் உருவாக்கியது. இதற்காக 2019ல் வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து யோக இடைவேளையை வடிவமைத்தல் மற்றும் அதனை மேம்படுத்தும் வேலைகள் ஒப்படைக்கப்பட்டன.

யோகா இடைவெளி அறிமுகம்

அந்த குழுவின் பரிந்துரைகளின் பேரில், கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஆறு நகரங்களில் யோகா இடைவெளி ஒரு முன்னோட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆசனங்கள், பிராணயாமம், தியானம் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அனைத்து அரசு துறைகளும் தங்களது ஊழியர்களுக்கு 5 நிமிட யோகா இடைவெளி வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது ஊழியர்கள் அனைவருக்கும் புத்துணர்வு அளிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad