ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: உருவாகும் புதிய சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: உருவாகும் புதிய சிக்கல்!

ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: உருவாகும் புதிய சிக்கல்!


தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாள்கள் ஆகின்றன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பின் காரணமாக என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் விசாரிக்கும் போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.


பல மாதங்களாக வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த மாணவர்கள் நண்பர்களைச் சந்தித்து பேச பள்ளிகள் திறப்பு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனச் சோர்விலிருந்து மாணவர்கள் விடுபட்டு குதூகலமாகியுள்ளனர். ஆசிரியர்களும் இதைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே பாடங்களை திணிப்பதில்லை என்கின்றனர்.



ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவாகும் கொரோனா பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூரில் இரண்டே நாட்களில் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.



பாதிப்பு உறுதியானதும் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பின் காரணமாக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad