சட்டவிரோத குழந்தை விற்பனை செய்த மதுரை கலைவாணிக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

சட்டவிரோத குழந்தை விற்பனை செய்த மதுரை கலைவாணிக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!

 சட்டவிரோத குழந்தை விற்பனை செய்த மதுரை கலைவாணிக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!



மதுரையில் சட்டவிரோதமாகக் குழந்தை விற்பனை செய்த காப்பகத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் கலைவாணி ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும்
ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்திலிருந்த இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறி வேறு நபர்களுக்குக் குழந்தைகளை விலைக்கு விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் இயக்குநர் சிவகுமார், இவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad