EXCLUSIVE: தாடி வளர்த்தது ஏன்..? சினிமாவில் நடிக்க ஆசை..? - திருமாவளவன் ஓப்பன் டாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

EXCLUSIVE: தாடி வளர்த்தது ஏன்..? சினிமாவில் நடிக்க ஆசை..? - திருமாவளவன் ஓப்பன் டாக்!

EXCLUSIVE: தாடி வளர்த்தது ஏன்..? சினிமாவில் நடிக்க ஆசை..? - திருமாவளவன் ஓப்பன் டாக்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான
தொல். திருமாவளவன், "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா"வின், "சமயம் தமிழ்" இணைய தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்து உள்ளார். நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இதோ...!

கேள்வி: உங்களுடைய பிறந்த நாளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமின்றி, மற்ற தரப்பினரும் கொண்டாடுகின்றனரே, அதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 32 ஆண்டு கால உழைப்பிற்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். பொதுவாக, என்னுடைய பிறந்த நாளை நான் கொண்டாடுவதில்லை. என் பிறந்த நாளை கொண்டாடுவதால், கட்சியினருக்கு உற்சாகம் கிடைப்பதால் அதற்கு அனுமதி வழங்கினேன்.

கேள்வி: பொதுவாக, அரசியல்வாதிகள் என்றால், கரை வேட்டி, வெள்ளை சட்டையில் காட்சி அளிப்பார்கள். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, பேன்ட் - ஷர்ட்டில் இருக்கிறீர்களே.. அதற்கு காரணம் என்ன?

பதில்: அரசியல்வாதிகள் என்றால், கரை வேட்டி, வெள்ளை சட்டை தான் அணிய வேண்டும் என்ற நடைமுறை எழுதப்படாத விதி போல உள்ளது. எனக்கு அதில் எந்த ஈடுபாடும் இல்லை. மாணவர் பருவத்தில் எப்படி அரசியலில் ஈடுபட்டேனோ அதையே தற்போது பின்பற்றி வருகிறேன்.

கேள்வி: உங்களுடைய தற்போதைய போட்டோ சூட், "கபாலி" படத்தில் வருவது போல் உள்ளது என செய்தி வருகிறேதா... அதைப் பற்றி சொல்லுங்க!


பதில்: என்னுடைய பிறந்த நாளை ஒட்டி, புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என கட்சியினர் விருப்பப்பட்டனர். வேலைப்பளூ இருந்ததால், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தேன். ஆனால் தொழில் முறை புகைப்படக்காரர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தியதால், போட்டோ சூட்டிங்கிற்கு சென்றேன்.

No comments:

Post a Comment

Post Top Ad