கொடநாடு வழக்கு: முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

கொடநாடு வழக்கு: முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்!

கொடநாடு வழக்கு: முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணையை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், இது அரசியல் நோக்கத்திலான விசாரணைகள் அல்ல; உண்மை குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையிலேயே விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பங்களாவுக்கு மிகவும் நெருக்கமான சசிகலாவின் உறவினரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக திருச்சியில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை; பழனிச்சாமி எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad