ஓபிஎஸ் உடன் நேரில் சந்திப்பு: கைகளை பற்றி ஆறுதல் கூறிய சசிகலா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

ஓபிஎஸ் உடன் நேரில் சந்திப்பு: கைகளை பற்றி ஆறுதல் கூறிய சசிகலா!

ஓபிஎஸ் உடன் நேரில் சந்திப்பு: கைகளை பற்றி ஆறுதல் கூறிய சசிகலா!

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 60.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போடி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த ு வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்தினர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் பலரும் ஓபிஎஸ்-க்கு நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். திருமாவளவன், வைரமுத்து, முத்தரசன், கி.வீரமணி என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரில் சென்று ஒபிஎஸ்-சை சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். ஒபிஎஸ் கைகளை பற்றி அவரது மனைவியின் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்தார். அப்போது ஓபிஎஸ் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad