இறுகும் பிடி... அடுத்த சிக்கல்; சசிகலாவுக்கு சொந்தமான பங்களா முடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

இறுகும் பிடி... அடுத்த சிக்கல்; சசிகலாவுக்கு சொந்தமான பங்களா முடக்கம்!

இறுகும் பிடி... அடுத்த சிக்கல்; சசிகலாவுக்கு சொந்தமான பங்களா முடக்கம்!

சசிகலா சிறையில் இருந்தபோது, நீதிமன்ற அனுமதியோடு அவருக்கு தெரியாமல் போயஸ்கார்டன் வீட்டின் பூட்டை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன்படி, பண மதிப்பிழப்பு நேரத்தில், போயஸ்கார்டனில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மாற்றச் சொன்னதோடு, அதற்கு ஈடாக அவர்களது சொத்துக்களை தங்கள் பினாமிகளின் பெயருக்கு வாங்கி ஆவணங்களாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது. அதில், சசிகலா குடும்பத்தினர், சுமார் ரூ.1,600 கோடிக்கும் மேல் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், பல்வேறு நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கி சொத்துகளை முறைகேடாக குவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 20017இன் கீழ் வருமானவரித்துறையினர் அதிரடியாக நீதிமன்றம் மூலம் முடக்கினர்.



இதுதொடர்பாக, பினாமிகள் பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளை செய்துவந்த வருமானவரித்துறை, சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியதுடன் சம்மந்தப்பட்ட சொத்துகளை முடக்கியது.

அதன்பிறகு, சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லத்திற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவில் அவர் குடியேறத் திட்டமிருந்த நிலையில், அந்த பங்களாவும், அதுதவிர 64 சொத்துகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad