சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை விஜயகாந்த் தவிர்த்தார்.

அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் மேல் சிகிச்சைக்காக துபாய் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை துபாய் சென்றார். விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனும் உடன் சென்றார்.

மனைவி பிரேமலதாவும் அடுத்த ஓரிரு நாளில் துபாய் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்ச ை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சத்ரியன் திரைப்படத்தை செவிலியர்களுடன் ரசித்துப் பார்க்கும் புகைப்படம் வெளியானது.

No comments:

Post a Comment

Post Top Ad