தமிழகத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை; வெளியான ஹேப்பி நியூஸ்!
தமிழக சட்டமன்றத்தில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து முதல்முறை வேளாண் பட்ஜெட் தாக்கலானது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில், பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், துறை சார்ந்த அமைச்சர்களின் புதிய அறிவிப்புகள் என கூட்டத்தொடர் அனல் பறந்தது. நேற்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
உறுப்பினர்கள் கேள்விக்கு பதில்
இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் பேசினர். இந்த உறுப்பினர்களின் பேச்சுக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இந்த சூழலில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை பற்றி பேசிய தமிழக முதல்வர், நாங்கள் ஒருமுறை அல்ல. 10 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். 10 ஆண்டுகாலம், ஆட்சியில் இருந்த நீங்கள் அதை செய்யவில்லை. முன்வரவில்லை.
கூட்டத்தொடர் நேரலை
அதனால் தான் தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறினோம். தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது. அதனால் தான் அந்த முயற்சியில் இறங்க முடியவில்லை. சென்னை ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது நேரடியாக ஒளிபரப்பும் சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தி தருவோம் என்று கூறினார். பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 10)
விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்ததாக சனி, ஞாயிறு என வழக்கமான வார இறுதி விடுமுறை வருகிறது.
No comments:
Post a Comment