கட்டாய விடுப்பு: அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்!
பஞ்சாப் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசையாவது போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என, அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடும்படி, அதிகாரிகளுக்கு,
முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இந்நிலையில் இன்று, ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளுடன், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர், முதலமைச்சர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், எதிர் வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 30 ஆம் தேதி வரை
நீட்டிக்கப்படுகிறது. உணவகங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசையாவது போட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment