நானே வரேன்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள், மழைநீர் தேங்கா வண்ணம் மேற்கொள்ளப்படும் இதர வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காந்தி மண்டபல் சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இங்கு தேங்கும் நீரையும், அருகே உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் தேங்கும் நீரையும் அகற்றும் வகையில் 1,516 மீட்டர் நீளத்துக்கு 4.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளன.
இப்பணிகளை முதல்வர் இன்று நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணியையும் முதல்வர் நேரில் பார்வையிட்டார். இப்பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் இந்திரா நகர் ரயில் நிலையம், திருவான்மியூர் லேட்டிஸ் பாலம் அருகே பக்கிங்காம் கால்வாயில் 26.50 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.
வனத்துறை சார்பில் பள்ளிக்கரணை சதுப்பி நிலத்தில் சேர்ந்துள்ள கழிவுகள், குட்டைகள் மற்று சிறு பாலங்கள்
கீழ் பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை 9.80 லட்சம் ரூபாய் செலவில் அகற்றும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்டார்.
நாராயணபுரம் ஏரியில் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியையும் முதல்வர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளரும் பகுதியில் நீரோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இந்த ஏரியில் நடைபெறும் ஆகாயத் தாமரை அகற்றப் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment