'தஞ்சாவூராம்மா?' ஆமாங்கய்யா.... செல்லும் வழியில் முதல்வர் சுவாரசியம்..!
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதியான பாலசுப்ரமணியம் - நாகரத்தினம் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தங்களது மகளை பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவ்வழியே செல்லும்போதெல்லாம் இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் அவ்வழியே முதல்வர் வருவார்
என்றும் வழக்கம்போல வணக்கம் தெரிவிக்க தம்பதி காத்திருந்தனர். அதன்படி, வந்துகொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் தம்பதியை பார்த்ததும் காரைவிட்டு இறங்கி வந்து அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பதி, ''தினமும் காலை இந்த நேரத்தில் முதல்வரின் கார் கடந்து செல்லும். நாங்கள் இருவரும் அந்த நேரத்தில் முதல்வருக்கு வணக்கம் வைப்போம்.
அவரும் பதிலுக்கு வணக்கம் கூறுவார். இன்று எதிர்பாராதவிதமாக அவரே காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தார். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், ''அடிக்கடி தனக்கு வணக்கம்
வைக்கும் முதிய தம்பதியினரை கவனித்த முதல்வர் இன்று காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சென்று நலம் விசாரித்து உள்ளார். அவர்களும் தஞ்சாவூர்தானாம்! ஆனா, எப்படியோ ஊர்காரங்க அடையாளம் கண்டு ஒண்ணா சேர்ந்துடுறாங்க'' என நெட்டிசன்கள் பெருமையுடன் பதிவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment