ஒரு சட்டம் நியாயமற்றது என்றால், அதற்கு கீழ்ப்படிய மறுப்பதுஉரிமை - முதல்வர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

ஒரு சட்டம் நியாயமற்றது என்றால், அதற்கு கீழ்ப்படிய மறுப்பதுஉரிமை - முதல்வர்

ஒரு சட்டம் நியாயமற்றது என்றால், அதற்கு கீழ்ப்படிய மறுப்பதுஉரிமை - முதல்வர்

சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலுரை; ''சமூகத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டிடும் கடமையும்
பொறுப்பும் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறதோ, அங்கே சட்டங்கள் ஏற்கப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படுகின்றன; அதன் காரணமாக அந்தச் சமுதாயம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது; என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு சட்டம் நியாயமற்றது என்றால், அதற்கு கீழ்ப்படிய மறுப்பது உரிமை எனக் கருதப்படும் (When a Law is unjust, it is only right to disobey) என தாமஸ் ஜெஃபர்சன் அவர்களும், மகாத்மா காந்தியடிகள் அவர்களும் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் விடுப்பே இல்லாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள். அவர்கள் தியாகத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. ஆனாலும், அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியின் அடையாளமாக 25 இலட்சம் ரூபாய் வழங்கினோம். காவலர்கள் அனைவருக்கும் தலா 5,000 ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய அரசுதான் இந்த அரசு.

இதற்கென 58.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விடுப்பே இல்லாமல் பணியாற்றும் காவலர்களின் கவலையைப் போக்க வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 968 உதவி ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தடய அறிவியல் துறை சார்பில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்காக 62 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று நான் மக்களிடம் மனுக்களைப் பெற்றேன். அந்த மனுக்களை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றிக் காட்டுவேன்
என்று சொன்னேன். அந்த மனுக்களில் உள் துறை சார்பாக வந்த மனுக்கள் 1,498. இந்த மனுக்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டிருக்கிறோம் என்பதையும் இந்த மன்றத்துக்கு நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இட ஒதுக்கீடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் 20 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான் அது
செயல்படுத்தப்பட்டது. இடைப்பட்ட 10 ஆண்டுகளில் அவ்வாறு செயல்படுத்தப்படவில்லை. பல வழங்குகள் நீதிமன்றத்திற்குச் சென்றன. ஆனால், இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்
பொறுப்பேற்றபொழுது தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறோம்.

மனிதவள மேலாண்மைத் துறையால் 16-8-2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 82-ல் குறிப்பிட்டுள்ளபடி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்'' என இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad