மீரா மிதுனை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! பரபரப்பான சட்டசபை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

மீரா மிதுனை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! பரபரப்பான சட்டசபை

மீரா மிதுனை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! பரபரப்பான சட்டசபை

காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்
''மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், ஆவடி, தாம்பரம் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்.


மக்கள்தொகைக்கேற்ப மக்களுக்கு சேவையாற்ற 10 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு வசதியாக 4 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த அரசைப் பொறுத்தவரையில், குற்றம் என்ற ஒன்று நடந்தால் சாதி, மதம், இனம், மொழி, கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் காவல் துறைக்குக் கண்டிப்பான உத்தரவை
வழங்கியிருக்கிறேன். அதனடிப்படையில், தனியார் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு ஆசிரியர்மீது புகார் வந்ததும், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விளையாட்டுப்
பயிற்சியாளர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள்.

பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவரை உடனடியாகக் கைது செய்தோம். பட்டியலினத்தவரை விமர்சித்துப் பேட்டி அளித்த ஒரு நடிகை உடனடியாகக் கைது செய்யப்பட்டார். PUBG விளையாட்டு மூலமாக Youtube Channel-ல் ஆபாசமாக நடந்துகொண்ட
ஒருவர் கைது செய்யப்பட்டார். இவற்றை நினைவூட்டுவதற்குக் காரணம், புகார் எழுந்ததும், எவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யும் அரசாக இந்த அரசு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இதைச் சொன்னேன்.

அதேபோல், மணல் கடத்தல், குட்கா விற்பனை, பொது விநியோகப் பொருட்கள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள்மீதெல்லாம் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும். இன்றைக்கு அனைத்தையும் விஞ்சியதாக cyber குற்றங்கள் பெருகிவிட்டன. தொழில்நுட்பம் வளர வளர அதனைக் குற்றம் செய்வோர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் குற்றங்கள் பெருகிவிட்டன. இணையவழிப் பொருளாதாரக் குற்றங்கள் அதிகமாகிவிட்டன.

தொழில்நுட்பச் சேவைகளைத் திருடுவது, தகவல்களை அழிப்பது, முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது, இணையதளங்கள் மூலமாக மிரட்டுவது, போலிக் கணக்குகள், போலிப் பெயர்கள் ஆகியவை
பெருகிவருகின்றன. இந்த இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. நிதிக் குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனைக் கண்டுபிடித்து தடுப்பதற்கான நவீன வழிமுறைகள் கொண்டதாக தமிழ்நாடு காவல் துறை நிச்சயமாக மாற்றியமைக்கப்படும்'' என முதல்வர் சட்டசபையில் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad