வெள்ளநீரில் தள்ளாடும் விமானங்கள்? தலைநகரை புரட்டி எடுத்த கனமழை!
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வெள்ளி அன்று ஒரேநாளில் 1,000 மில்லிமீட்டர் மழை பெய்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஒட்டுமொத்தமாக கடந்த 46 ஆண்டுகளில் பெய்யாத மிகக்
கனமழை டெல்லியில் வெளுத்து வாங்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக டெல்லியின் மோதி பாக், ஆர்.கே.புரம்,
மது விகார், ஹரி நகர், ரோதக் ரோடு, பாதர்பூர், சோம் விகா, ரிங் ரோடு, பிரகலாத்பூர் அண்டர்பாஸ், முனிர்கா, ராஜ்பூர் குர்த், நாங்லோய், கிராரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கும் கனமழை
இதையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லியில் இன்று (செப்டம்பர் 11) காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். எங்களது ஊழியர்கள் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment