முதல் லிஸ்டை வெளியிட்ட சீமான்; நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

முதல் லிஸ்டை வெளியிட்ட சீமான்; நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம்!

முதல் லிஸ்டை வெளியிட்ட சீமான்; நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம்!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு 50% இடம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகிற்கு காட்ட இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல்முறை 50 சதவீத பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். இந்த சூழலில் வரவிருக்கும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து களமிறங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.

சுங்கக் கட்டணத்திற்கு எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் விரைந்து களப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், சுங்கக் கட்டணம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினார். அதாவது, தரமான சாலையில் பயணிக்க கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். எனது காரின் விலை 21 லட்ச ரூபாய்.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதில் 3 லட்ச ரூபாயை சாலை வரியாக கட்டியுள்ளேன். எந்த சாலைக்கு அந்த வரி என்று சொல்லுங்கள். அந்த சாலையில் மட்டும் பயணிக்கிறேன். என்னிடம் சுங்கக் கட்டணம் கேட்க வேண்டாம். ஒரேவொரு ஆண்டு என்னிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். ஒரே இரவில் ஜே.சி.பியை வைத்து சுங்கச் சாவடிகளை இடித்து விடுவேன் என்று அதிரடியாக பேசி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (செப்டம்பர் 19) வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad