கமல் கட்சியைச் சேர்ந்தவருக்கு தமிழக அரசு வழங்கிய முக்கிய பொறுப்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் அனுஷா.
இவர் தற்போது 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு
குழு துாதுவராக, நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர், திருப்பூரைச் சேர்ந்த அனுஷா கடந்த பத்து ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மாணவர்கள் மத்தியில், 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' இயக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் இதன் செயல்பாட்டை, வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் வகையில், சர்வதேச குழுவுக்கு துாதுவராக
நியமித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இப்பொறுப்பை, கட்சி சார்ந்து பார்க்கவில்லை. திமுக.வில் இருந்து யாரும் தன்னுடன் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment