ராஜ்யசபா எம்.பி., ஆனார் எம்.எம்.அப்துல்லா - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

ராஜ்யசபா எம்.பி., ஆனார் எம்.எம்.அப்துல்லா - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராஜ்யசபா எம்.பி., ஆனார் எம்.எம்.அப்துல்லா - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, தி.மு.க.,வின் எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க.,வின் முகமது ஜான், கடந்த மார்ச் மாதம் காலமானார். காலியாக உள்ள அவரது பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல், செப்டம்பர் மாதம் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தி.மு.க.,வின் சார்பில், எம்.எம்.அப்துல்லாவை வேட்பாளராக, அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அ.தி.மு.க., உட்பட மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. பெரும்பான்மை பலம் இருப்பதால் தி.மு.க., வெற்றி பெறுவது உறுதியானது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அப்துல்லாவின் வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.

சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த அக்னி ஸ்ரீராமசந்திரன், பத்மராஜன், கோ. மதிவாணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டமன்ற செயலாளருமான கி.சீனிவாசன் அறிவித்தார். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் எம்.எம்.அப்துல்லா வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவையில், தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad