எம்.பியாகிறார் எல்.முருகன்; எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

எம்.பியாகிறார் எல்.முருகன்; எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா?

எம்.பியாகிறார் எல்.முருகன்; எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா?

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, முதல்முறை கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து ஜூலை 7ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த சூழலில் எல்.முருகனுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.


மாநிலங்களவை எம்.பியாக போட்டி

இவர் எம்.பியாக இல்லாத நிலையில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. எனவே இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு எம்.பியாக தேர்வாக வேண்டியவது அவசியம். இல்லையெனில் அவரது இணையமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இந்த சூழலில் மாநிலங்களவைக்கு எம்.பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


எனவே எந்த மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவார் என்று பல்வேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பியாக எல்.முருகன் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து எல்.முருகன்,

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


எனவே எந்த மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவார் என்று பல்வேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பியாக எல்.முருகன் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து எல்.முருகன்,

மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் வி.டி.ஷர்மா உள்ளிட்டோருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை காலியிடத்திற்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்ய போதிய எம்.எல்.ஏக்களின் செல்வாக்கை கொண்டு பாஜக திகழ்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad