விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது அடிபடுவதுண்டு. கடந்த 2009ஆம் ஆண்டே நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் “மக்கள் இயக்கம்” என்ற அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டது. இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தது.
இதனிடையே, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று விஜய்யின் பெயரில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அக்கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக அவரது தாயார் ஷோபா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், “எனக்கும், என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சிலரை நீக்கி நிர்வாக ரீதியாக அதிரடி மாற்றங்களையும் விஜய் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment