ஹெல்ப் பண்ணுங்க சி.எம்., ப்ளீஸ்: சேலம் சிறுமியை ஓடிச் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ராஜ நந்தினி. இந்த தம்பதிக்கு ஜனனி (14) என்ற மகள் உள்ளார். 10ஆம் வகுப்பு படித்து வரும் ஜனனி, சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார்.
இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் திடீரென மயங்கி
விழுந்த சிறுமி ஜனனியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போவதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் தாய், தனது சிறுநீரகம் ஒன்றை மகளுக்கு கொடுத்துள்ளார். ஆனால், அதுவும் 15 நாட்களில் செயலிழந்து போயுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அவரது தாய், சிறுமி ஜனனிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு தலைமை செயலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அத்துடன், தாய் ராஜ நந்தினி, சிறுமி ஜனனி ஆகியோர் தங்களுக்கு உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டனர். இது சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், சிறுமி மற்றும் அவரது
தாயாரிடம் பேசிய ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறியதுடன் கண்டிப்பாக உதவி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய சிறுமி, ‘பயமா இருக்கு; என்னை எப்படியாவது காப்பாத்த முடியுமா? ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்’ என்று கேட்டது அனைவரது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
No comments:
Post a Comment