கோவையிலும் தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் சரக்கு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

கோவையிலும் தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் சரக்கு?

கோவையிலும் தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் சரக்கு?


கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக-கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கோவை-கேரளா எல்லையான வாளையாறு, மீனாட்சிபுரம், உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் சமீரன் கூறும்போது, "கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்தார். இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 வழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இதேபோல் கேரளாவில் இருந்து வருவோருக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு உடல் வெப்பநிலை சோதனையும் நடத்தி வருகிறோம். மேலும் கொசுக்கள் மூலமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்பு மூலமாக தீவிரப்படுத்தி உள்ளோம்" என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

சுல்தான்பேட்டையில் 3 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவிய சம்பவம் குறித்த கேள்விக்கு, 'பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது. நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். யாரும் அச்சப்பட வேண்டாம்.கோவையைப் பொருத்தவரை 83 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சலையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பாராசிட்டமால் வினியோகமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்று ஆட்சியர் சமீரன் பதிலளித்தார்.
நீலகிர மாவட்டத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கவும், ரேஷனில் குடிமைப் பொருள் வாங்கவும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, 'கோவையிலும ஒரு சில கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் கொண்டு வரப்படும்' என்று ஆட்சியர் தெரிவித்தார்.அவரது இந்த விளக்கத்தின் மூலம், கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இனிவரும் நாட்களில் தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு மட்டுமே சரக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
















No comments:

Post a Comment

Post Top Ad