ஆப்கன் விவகாரம்: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!
ஆப்கன் விவகாரம் தொடர்பாக, உயர்மட்டக் குழுவுடன், பிரதமர் நரேந்தி மோடி திடீர் ஆலோசனை நடத்தினார்
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, டெல்லியில், உயர்மட்டக் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று ஆலோசனை நடத்தினார்.தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
தலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த பஞ்ச்ஷிர் மாகாணமும் தற்போது அவர்களது கைகளுக்கு சென்றுள்ளது. இதை அடுத்து ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment