SHOCKING NEWS: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

SHOCKING NEWS: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

SHOCKING NEWS: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள, சைதாபாத் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும், 6 வயது சிறுமியை காணவில்லை என, அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

ஆனால் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. அதே நேரம், பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க நபரையும், சிறுமி காணாமல் போனதற்கு பிறகு காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மீது புகார் அளித்தனர். இதை அடுத்து அந்த நபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு, பெட் ஷீட்டில் போர்த்தப்பட்டு, அரை நிர்வாண நிலையில், சிறுமி ஒருவரின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களும் இருந்தன. விசாரணையில், காணாமல் போன சிறுமி என்பது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், சம்பப்பேட் - கர்மன்கட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை, விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தொடர்பாக கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகி உள்ள நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad