மருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலியான பரிதாபம்!
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
ருமேனியா நாட்டில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான ருமேனியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ருமேனியாவின் தென் கிழக்கே அமைந்துள்ள கான்ஸ்டெண்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உட்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த மருத்துவமனையில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.நாகையில் பேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை!
No comments:
Post a Comment