வருது இன்னொரு புயல் - தமிழக மக்களே உஷார்..! இந்த தேதி வரை மழை வெளுத்து வாங்குமாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

வருது இன்னொரு புயல் - தமிழக மக்களே உஷார்..! இந்த தேதி வரை மழை வெளுத்து வாங்குமாம்!

வருது இன்னொரு புயல் - தமிழக மக்களே உஷார்..! இந்த தேதி வரை மழை வெளுத்து வாங்குமாம்!



ஷாஹீன் புயல் காரணமாக, வரும் 4 ஆம் தேதி வரை தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஷாஹீன் புயல் காரணமாக, தமிழகம் உட்பட 7 மாநிலங்களுக்கு, வரும் 4 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு ஷாஹீன் (SHAHEEN) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் காரணமாக, வரும் 4 ஆம் தேதி வரை, தமிழகம், குஜராத், பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில், கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரபிக் கடல் பகுதியில் உருவாகி உள்ள ஹாஹீன் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாற உள்ளது. இதன் காரணமாக வரும் 4 ஆம் தேதி வரை பீஹார், மேற்கு வங்கம், சிக்கிம், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகள் உட்பட தமிழகம், கேரளா மாநிலங்களில், 1 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். இதனால் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, வரும் 4 ஆம் தேதி காலை வரை குஜராத் கடல் பகுதி மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஓமன் வளைகுடா மற்றும் வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.தற்போது வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஷாஹீன் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவாக கூடும். பின்னர் இந்திய கடல் பகுதியை விட்டு விலகி நகர தொடங்கி விடும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad