தடுப்பூசி போடலைன்னா டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்காது - வந்துவிட்டது உத்தரவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

தடுப்பூசி போடலைன்னா டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்காது - வந்துவிட்டது உத்தரவு..!

தடுப்பூசி போடலைன்னா டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்காது - வந்துவிட்டது உத்தரவு..!



கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை காட்டினால் மட்டுமே மது வழங்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
''விருதுநகர் மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) அனைத்து பகுதிகளிலும் சுமார் 900க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
முதல் தவணை மற்றும் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று, தடுப்பூசி செலுத்திகொள்ளவும்.

மேலும்,விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை- குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.
மேலும்,அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad