முதியவரை கொன்று புதைத்த 2 சிறுமிகள்; பகீர் வாக்குமூலம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

முதியவரை கொன்று புதைத்த 2 சிறுமிகள்; பகீர் வாக்குமூலம்!

முதியவரை கொன்று புதைத்த 2 சிறுமிகள்; பகீர் வாக்குமூலம்!


முதியவரை வெட்டி கூறுபோட்டு காட்டுக்குள் புதைத்த 2 சிறுமிகள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது (70). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக நடமாட முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையொட்டி முதல் மனைவியை கவனித்துக்கொள்வதற்காக நிலம்பூர் என்ற இடத்தில் இருந்து ஒரு பெண்மணியை முகமது தனது வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளார்.
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவர்களும் அந்த வேலைக்கார பெண்மணியுடன் முகமது வீட்டிலேயே தங்கி இருந்தனர்.சம்பவத்தன்று இரண்டாவது மனைவி தற்செயலாக வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்போது காலை 10 மணி அளவில் முகமது வேலைக்கு சேர்ந்த பெண்மணியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதை அறிந்த அவரது இரு மகள்களும் தடுக்க முயன்றனர். இதில் கோபம் அடைந்த முகமது சிறுமிகளை அடித்து துன்புறுத்தினார். பின்னர், மீண்டும் தங்களது தாயை பலாத்காரம் முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமிகள் அங்கே இருந்த ஒரு கோடாரியை எடுத்து முகமதுவின் தலையில் ஓங்கி 2 முறை அடித்தனர். இதில், முகமது ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்தார். இதை தொடர்ந்து முகமது வலது காலை சிறுமிகள் கோடாரியால் வெட்டி

இதன் பிறகு முகமது இறந்ததை அறிந்து தாய் மற்றும் சிறுமிகள் மூவரும் சேர்ந்து ஒரு சாக்கு மூட்டையில் முகமது உடலை கட்டி ஒரு குழியில் போட்டு மறைத்து வைத்தனர். பின்பு சிறுமிகள் சுல்தான் பத்தேரி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாயை கைது செய்து முகமது உடலை மீட்டு சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு 2 சிறுமிகளையும் போலீசார் அங்குள்ள குழந்தைகள் காப்பக மையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் இன்று காலை வீடு திரும்பிய முகமதுவின் 2வது மனைவி திடுக்கிடும் தகவலை கூறினார்.

அதாவது இந்த கொலையை இரு சிறுமிகளும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கொலை நடப்பதற்கு எனது உறவினர்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு போலீசாரிடம் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment

Post Top Ad