மரத்தை திருமணம் செய்த பெண் - 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வரும் வினோதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 28, 2021

மரத்தை திருமணம் செய்த பெண் - 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வரும் வினோதம்!

மரத்தை திருமணம் செய்த பெண் - 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வரும் வினோதம்!





மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக பெண் ஒருவர் குடும்பம் நடத்தி வருகிறார்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில், எல்டர் என்ற மரத்தை, 37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு, தனது பெயருடன் எல்டர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அவர், வாரத்திற்கு ஐந்து முறை எல்டர் மரத்தை பார்த்து விட்டு செல்கிறார். மேலும் பாக்சிங் டே தினத்தன்று மரத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், கேட் கன்னிங்ஹாம் கூறினார். மரம் தன்னை நிறைவு செய்கிறது என்றும், இந்த உறவு தனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது என்றும் கேட் தெரிவித்தார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மரத்தை மாலை, டின்சல் மற்றும் பாபிள்களால் போன்றவற்றால் கேட் கன்னிங்ஹாம் அலங்கரித்து உள்ளார்.

கேட் கன்னிங்ஹாம் உண்மையில் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad