நகை கடன் தள்ளுபடி விவகாரம் அமைச்சர் ஐ பெரியசாமி கடும் எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

நகை கடன் தள்ளுபடி விவகாரம் அமைச்சர் ஐ பெரியசாமி கடும் எச்சரிக்கை!

நகை கடன் தள்ளுபடி விவகாரம் அமைச்சர் ஐ பெரியசாமி கடும் எச்சரிக்கை!




5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்டத்தில் அமைச்சர் ஐ பெரிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏழை-எளிய மக்கள், விவசாயிகள் வைத்திருக்கும் 40 கிராம் அதாவது 5 பவுன் தங்க நகை கடன் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

நகை கடன் தள்ளுபடி கூட்டுறவு சங்க தலைவரோ செயலாளரோ பணம் கேட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைகடன்களில் 14.5 லட்சம் நகைகடன்கள் மட்டுமே ஏற்புடையது. அதாவது ஒரு குடும்பத்திற்கு 40 கிராம் நகைகள் கடனில் வைத்திருப்பது மட்டுமே ஏற்புடையது.
வரும் திங்கள் முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம்


கூட்டுறவுத் துறையின் மூலம் சுய உதவி குழு கடன் 2 ஆயிரத்தை 761 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன் 12 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகை கடன் 6 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கல்விக் கடன் ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் அது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.

கடந்த ஆட்சியாளர்கள் 6 லட்சம் கோடி கடனின் வைத்துச் சென்ற போதிலும் முதல்வர் கொரோனா காலத்திலும், பெரும் வெள்ள காலத்திலும் சிறப்பான ஆட்சி செய்து கொடுத்த வாக்குறுதியின்படி நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad