IPL 2022: ‘மெகா ஏலம்’…கொல்கத்தா அணி தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: பஞ்சாப் வீரர்களுக்கு குறி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

IPL 2022: ‘மெகா ஏலம்’…கொல்கத்தா அணி தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: பஞ்சாப் வீரர்களுக்கு குறி!

IPL 2022: ‘மெகா ஏலம்’…கொல்கத்தா அணி தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: பஞ்சாப் வீரர்களுக்கு குறி!



மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி 5 பேரை டார்கெட் செய்து தூக்கும் எனக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டுமுதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


வீரர்கள் தக்கவைப்பு:

இந்நிலையில், எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

(தக்கவைப்பு குறித்த முழு விபரம்: 

கொல்கத்தா அணி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேப்டன் இயான் மோர்கன், ஷுப்மன் கில் ஆகியோரை தக்கவைக்கவில்லை. கில், கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என பேச்சுகள் எழுந்த நிலையில், அவரை கழற்றிவிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மெகா ஏலத்தின்போது கொல்கத்தா அணி 5 பேரை டார்கெட் செய்து தூக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

2018 முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதிஷ் ராணா, ஒவ்வொரு வருடமும் 300+ ரன்களை அடித்து வந்தார். கடந்த சீசனிலும் சிறப்பாக விளையாடி 383 ரன்களை சேர்த்தார். மிடில் வரிசையில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், இவரை அணி நிர்வாகம் டார்கெட் செய்யும் எனக் கூறப்படுகிறது.

4.முகமது ஷமி:

2013ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய முகமது ஷமி, அதன்பிறகு டெல்லி அணிக்கு சென்றார். கடைசியாக 2018 முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணிக்காக மொத்தம் 46 போட்டிகளில் 61 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். பாட் கம்மின்ஸை கழற்றிவிட்டுள்ளதால், அனுபவ பௌலர் தேவைக்காக இவரை கொல்கத்தா அணி ஏலம் எடுக்கும் எனக் கருதப்படுகிறது.

3.நிகோலஸ் பூரன்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் முதல் போட்டியில் மட்டுமே கிறிஸ் லின் களமிறக்கப்பட்டார். அப்போட்டியில் 49 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். இருப்பினும், அடுத்தடுத்த போட்டிகளின்போது ரோஹித் ஷர்மா அணிக்குள் வந்துவிட்டதால், இவருக்கான இடம் பறிபோனது. அதன்பிறகு களமிறக்கப்படவே இல்லை. பார்மில் இருந்த இவர் பெஞ்சில் மட்டுமே அமர்ந்திருந்தார். இவரை வாங்க, அந்த அணி கடுமையாக போட்டி போடும் எனக் கருதப்படுகிறது.

வாய்ப்பு கிடைத்தால், கடைசிவரை கொல்கத்தா அணிக்கு மட்டுமே விளையாடுவேன் என ஷுப்மன் கில் பேசியுள்ளார். இவர், ஓபனராக களமிறங்கிய பயமில்லாமல் விளையாடக் கூடியவர். சரியான பார்ட்னர் இல்லாததால்தான், கொல்கத்தா அணிக்கு இவரால் சிறந்த துவக்கத்தை தரமுடியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினார்கள். கிறிஸ் லின், ஷுப்மன் கில் ஓபனர்களாக இருந்தால், சிறப்பாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad