மாணவர்களுக்கு வந்த பிரச்சனை; பெற்றோர் கவலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 21, 2021

மாணவர்களுக்கு வந்த பிரச்சனை; பெற்றோர் கவலை!

மாணவர்களுக்கு வந்த பிரச்சனை; பெற்றோர் கவலை!



பள்ளி மாணவர்களுக்கு வந்த பிரச்சனையை பார்த்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவனூர் - கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் மேம்பாலம் இல்லாததால் ஸ்ரீமுஷ்ணம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ , மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை கணவனுக்கு வந்த சோதனை; காவல் ஆணையரிடம் புகார் மனு!

இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக காவனூர் - கள்ளிப்பாடி வழியாக ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு 7- கிலோமீட்டர் தொலைவில் சென்று விட முடியும். ஆனால் காவனூர் கிரமத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வழியாக சுற்றி வந்தால் 35 கிலோ மீட்டருக்கு மேல் சென்று வர வேண்டி உள்ளது.

இவ்வளவு தூரம் சென்று வர வேண்டுமா? என்று நினைத்து மக்களும், மாணவர்களும் ஆபத்தை உணராமல் ஆற்று தண்ணீரை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் காவனூர் - கள்ளிப்பாடி வெள்ளாற்றில் ஆற்றின் குறுக்கே இடுப்பளவு தண்ணீரில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனம், டிராக்டர் மூலம் ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காவனூர்- கள்ளிபாடி பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசு மணிமுத்தாறு குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.




No comments:

Post a Comment

Post Top Ad