பிப்ரவரி 4 ல் பள்ளி, கல்லூரி திறப்பு; கல்வி அமைச்சரின் புது அப்டேட்!
பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.
புதுச்சேரியில், வருகிற 4-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்
புதுச்சேரி சட்டப்பேரவையில், செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்; புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால், வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் கூறினார்.
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. அப்படி புகார் வந்தால் அந்தப் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பேட்டியின்போது கல்வித்துறை இயக்குனர் ருத்திரகவுடு உடன் இருந்தார்.
No comments:
Post a Comment