பட்ஜெட்: வேளாண் துறையில் புதிய தொழில்கள்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

பட்ஜெட்: வேளாண் துறையில் புதிய தொழில்கள்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

பட்ஜெட்: வேளாண் துறையில் புதிய தொழில்கள்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு!


பட்ஜெட் அறிக்கையில் வேளாண் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதில் வேளாண் துறையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வேளாண் துறையில் மதிப்புக் கூட்டு சேவைகளை ஊக்குவிக்க அரசு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக கோட்டக் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டன. இதனால், பட்ஜெட்டில் வேளாண்மை துறை, விவசாயம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேளாண் துறையில் மதிப்புக் கூட்டு சேவைகளை ஊக்குவிக்க அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கோட்டக் செக்யூரிட்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேளாண் துறையை பொறுத்தவரை போக்குவரத்து, மார்க்கெட்டிங், பிராண்டிங் போன்ற மதிப்புக் கூட்டு சேவைகளை அரசு ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயத்தில் புதிய தொழில்களும், வேலைவாய்ப்புகளும் பெருக வாய்ப்புகள் உண்டு.
இதுபோக, எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையில் 65% இறக்குமதி மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய், தங்கத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் சரக்காக சமையல் எண்ணெய் இருக்கிறது. எனவே, சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad