5 மாநில தேர்தல் - வாக்காளர்களை கவருமா மத்திய பட்ஜெட்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

5 மாநில தேர்தல் - வாக்காளர்களை கவருமா மத்திய பட்ஜெட்?

5 மாநில தேர்தல் - வாக்காளர்களை கவருமா மத்திய பட்ஜெட்?


நாடாளுமன்றத்தில் இன்று, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில், ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், பிரசாரம் களை கட்டி உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை, பாஜகவைச் சேர்ந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இது, அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் ஆகும்.

உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலங்களின் வாக்காளர்களை கவரும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேச வாக்காளர்களை கவரும் வகையில், பட்ஜெட்டில், அம்மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா? வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad