5 மாசமா குடிக்க தண்ணீரே இல்லாத கிராமம்: அதிர வைக்கும் கதை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

5 மாசமா குடிக்க தண்ணீரே இல்லாத கிராமம்: அதிர வைக்கும் கதை!

5 மாசமா குடிக்க தண்ணீரே இல்லாத கிராமம்: அதிர வைக்கும் கதை!


5 மாதங்களாக குடிநீரின்றி அவதிப்படும் எச் ஈச்சம்பாடியைச் சேர்ந்த கிராமமக்கள். புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டி பொதுமக்கள் காலி குடங்களை வைத்து போராட்டம்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எச். ஈச்சம்பாடி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்து காணப்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டியும் தங்கள் பகுதிக்கு புதிதாக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டி இன்று அப்பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் திடிர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:
தங்கள் பகுதிக்கு 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர்த் தேக்க தொட்டி மற்றும் தங்கள் பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பிடிஓ மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரிடத்தில் மனு அளித்தோம். இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடம் மனு அளித்தோம். அதன் விளைவாக எங்கள் பகுதிக்கு சுமார் ஆயிரம் லிட்டர் மினி டேங்க் அமைத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த மினி டேங்கில் தற்போது தண்ணீர் மிக குறைவாகவே வருகிறது.

குடித்தண்ணீர் பிரச்சினையால் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். குறிப்பிட்ட கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீருமா என்பது கேள்விக்குறிதான்.

No comments:

Post a Comment

Post Top Ad