வேட்புமனு முதல் ரிசல்ட் வரை... தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 3, 2022

வேட்புமனு முதல் ரிசல்ட் வரை... தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வேட்புமனு முதல் ரிசல்ட் வரை... தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த கோரி, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கண்காணிப்பு 100 சதவீத கண்காணிப்பு, ஸ்ட்ராங்க் ரூமிலும் கண்காணிப்பு கேமரா போன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றும், விதிமீறல்கள் நடந்து உள்ளதாகவும் தெரிவித்தார். வேட்பு மனுக்களில் பக்கங்கள் கிழிக்கப்பட்டதால், வேட்பு மனு நிராகரிப்பு போன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதால், முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி வேட்பு மனுத் தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், வேட்பு மனுவின் பக்கங்களை குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க விதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டதுடன், விரிவாக பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், அனைத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்து உள்ளதால், வேட்பு மனு தாக்கல், தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad