கோவையில் கொரோனாவுடன் போட்டி போடும் கொசு நோய்: மக்கள் கடும் பீதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

கோவையில் கொரோனாவுடன் போட்டி போடும் கொசு நோய்: மக்கள் கடும் பீதி!

கோவையில் கொரோனாவுடன் போட்டி போடும் கொசு நோய்: மக்கள் கடும் பீதி!


கோவை மாவத்தில் கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரபடி 32 குழந்தைகள் உட்பட 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் டெங்கு காய்ச்சலும் சற்று தலை தூக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உட்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநகர் பகுதியில் ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் ஆயிரத்து 500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கொரோனாவுக்கு மத்தியில் இந்த குளிர் காலத்தில் நமக்கு மற்றொரு பிரச்சினையாக டெங்கு பாதிப்பு உருவெடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும்.

இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதனால் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கொசுக்கள் எளிதாக உற்பத்தியாக ஏதுவாக மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் டெங்கு பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad