விழுப்புரத்தில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான்? - ஆட்சியர் அதிர்ச்சி தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

விழுப்புரத்தில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான்? - ஆட்சியர் அதிர்ச்சி தகவல்

விழுப்புரத்தில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான்? - ஆட்சியர் அதிர்ச்சி தகவல்





விழுப்புரம் மாவட்டத்தில் ஒமைக்ரான் அறிகுறியுடம் 19 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரனோ மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் விதிகப்பட்டு நாளை முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் தலைமையில் அனைத்து அதிகாரிகளுடன் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் மோகன் கூறியது:

தமிழக அரசு விதித்துள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வணிக கடைகளில் உள்ள ஊழியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 94 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி 63 சதவிகித்தனர் செலுத்தியுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒமைக்ரான் அறிகுறியுடன் 19 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad