தந்தை வழியில் பேரூராட்சி தேர்தலில் களமிறங்கும் அமைச்சர் மஸ்தான் வாரிசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

தந்தை வழியில் பேரூராட்சி தேர்தலில் களமிறங்கும் அமைச்சர் மஸ்தான் வாரிசு!

தந்தை வழியில் பேரூராட்சி தேர்தலில் களமிறங்கும் அமைச்சர் மஸ்தான் வாரிசு!


செஞ்சி பேரூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மணலூர்ப்பேட்டை, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், 18 வார்டுகளை கொண்ட செஞ்சி பேரூராட்சியில் ஆண்கள் 11,497. பெண்கள் 12422 மற்றும் திருநங்கைகள் 20 பேர் என மொத்தமாக 23,939 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியலில் பரபரப்பு மிக்க பேரூராட்சியாக தற்போது செஞ்சி உள்ளது. பேரூராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 1986ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க. சார்பில் தற்போதைய சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ள மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.க‌வும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.கவும் வெற்றி வாகை சூடியிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 17-ம் தேதி செஞ்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக சார்பில் விருப்பமனு பெறப்பட்டு நேர்க்காணல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் மற்றும் மனைவி சைதானி நேர்காணலில் கலந்து கொண்டனர்.

மேலும், செஞ்சி பேரூராட்சி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மொக்தியார் களமிறங்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ள மொக்தியார் மஸ்தான், உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுவதால், அவர் தான் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் என உடன்பிறப்புகள் அடித்துக்கூறுகின்றனர். ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், தற்போது செஞ்சி மஸ்தானின் மகனும் தேர்தலில் களமிறங்குவது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad