விபத்தில் பலியான ஊழியர்.. கதறிய குடும்பத்துக்கு ஓடிவந்து உதவிய சொமேட்டோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

விபத்தில் பலியான ஊழியர்.. கதறிய குடும்பத்துக்கு ஓடிவந்து உதவிய சொமேட்டோ!

விபத்தில் பலியான ஊழியர்.. கதறிய குடும்பத்துக்கு ஓடிவந்து உதவிய சொமேட்டோ!


மதுபோதையில் வாகனம் ஓட்டிய போலீசாரால் விபத்தில் கொல்லப்பட்ட சொமேட்டோ ஊழியரின் குடும்பத்துக்கு உதவுவதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது
சலில் திரிபாதி என்பவர் டெல்லியில் சொமேட்டோ டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் ரோகிணி பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் சலில் திரிபாதி. அப்போது, அங்கு மதுபோதையில் கார் ஓட்டிவந்த போலீஸ் கான்ஸ்டபிள் சலில் திரிபாதி மீது காரை மோதினார்.
சம்பவ இடத்திலேயே சலில் திரிபாதி பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டிவந்த போலீஸ் கான்ஸ்டபிள் மகேந்திரா மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது கணவரின் மரணத்துக்கு நியாயம் வேண்டுமெனவும், தன் வாழ்வே இருண்டுவிட்டதாகவும் சலில் திரிபாதியின் மனைவி சுசிதா திரிபாதி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, சலில் திரிபாதியின் குடும்பத்துக்கு உதவுவதாகவும், அவரின் மனைவி சுசிதாவுக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெலிவரி ஊழியர் சலில் திரிபாதியின் மரணத்தால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளோம். அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை எங்கள் குழு வழங்கி வருகிறது.
விபத்து நடந்த இரவில் இருந்து சலில் திரிபாதியின் குடும்பத்துடன் எங்கள் குழு உள்ளது. இறுதிச் சடங்கு செலவு உள்பட பல்வேறு செலவுகளுக்கு ஏற்கெனவே உதவி வழங்கியுள்ளோம். குடும்பத்துக்கு தேவையான இன்சூரன்ஸ் தொகை 10 லட்சம் ரூபாய் கிடைக்கவும் உதவி வருகிறோம்.

குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப எல்லா உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். சலிலின் மனைவி சுசிதாவுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். அதன் மூலம் அவர் தனது குடும்பத்தை நடத்தவும், 10 வயது மகனின் கல்விச் செலவுகளை சந்திக்கவும் முடியும்.

இத்துடன் சொமேட்டோ ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக 12 லட்சம் ரூபாய் திரட்டி சலிலின் குடும்பத்துக்கு உதவியுள்ளனர். இந்த கடினமான சூழலில் சலில் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தொடர்ந்து உடனிருப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், திரைப்பட இயக்குநர் மணிஷ் முந்த்ராவும் சுசிதா திரிபாதிக்கு 4 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.





No comments:

Post a Comment

Post Top Ad