திருமணங்களுக்கு செல்வோருக்கு அனுமதி.. ஊரடங்கில் ட்விஸ்ட்!
ஊரடங்கின்போது திருமண நிகழ்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பயங்கர வேகத்தில் பரவி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மேலும், மூன்றாம் அலை தொடங்கிவிட்டதால் அரசும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளும் தினசரி அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு நாட்களில் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.
நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment